ராசிபலன்

மகரம்

இன்றைய பலன்:

மகரம் முக்கியமற்ற விவகாரங்கள் குறித்து அதிகம் யோசிக்க வேண்டாம். மாறாக, இரட்டிப்பு ஆதாயம் உள்ள பணிகளில் ஈடுபடவும். தெய்வ அருள் துணை நிற்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2 நிறம்: அரக்கு, பச்சை

வாரப் பலன்:

அன்­புள்ள மகர ராசிக்­கா­ரர்­களே,

இவ்வாரம் சுக்கிரன், புதனின் சஞ்சாரம் சிறப்பாக உள்ளது. செவ்வாயால் நலமுண்டு. சனி, ராகு, கேது, சூரியனின் மங்கலத்தன்மை கெடும். குருவால் நன்மை, தொல்லை இல்லை.

சூழ்நிலைக்கு ஏற்ப வளைந்துகொடுத்துச் செயல்படும் சாமர்த்தியசாலிகள் என உங்களைக் குறிப்பிடலாம். தற்போது வாழ்க்கை நிலை என்னாகுமோ ஏதாகுமோ என்று கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் உங்களது திட்டமிட்ட செயல்பாடும் விடாமுயற்சியும் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். அடுத்து வரும் நாள்களில் எந்த வெற்றியும் எளிதில் அமைந்துவிடாது. நல்ல திட்டங்களைத் தீட்டிவிட்டு நேரடியாக களமிறங்காவிட்டால் இழப்புகளைச் சந்திக்க நேரிடும். மாறாக ஒரு கை பார்த்துவிடுவோம் என்று வரிந்துகட்டினால் எல்லாம் சாதகமாகும். இவ்வாரம் எதிரிகளின் ஆதிக்கம் அதிகரிக்கக்கூடும். பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வதில் அவசரம் கூடாது. தற்போது வருமானம் அதிகரிக்க வாய்ப்பில்லை. எனவே கையிருப்புக்கு ஏற்ப எதையும் திட்டமிடுவது நல்லது. சொத்துகள் தொடர்பான முயற்சி களில் பெரியவர்களைக் கலந்தாலோசிக்கவும். உடல்நலம் அவ்வப்போது பாதிக்கப்பட வாய்ப்புண்டு. எனினும் உடல் கோளாறுகளில் இருந்து உடனுக்குடன் மீண்டு விடுவீர்கள். பணியாளர்களும் வியாபாரிகளும் முன்பு உழைத்ததற்குரிய நற்பலன்களை இப்போது அறுவடை செய்வர். வார இறுதியில் நம்பிக்கையூட்டும் தகவல்கள் கிட்டும். இச்சமயம் யாருடனும் மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டாம். வீட்டில் இயல்புநிலை இருக்கும். பெற்றோர் கூறும் அறிவுரைகளை ஏற்று நடப்பது நல்லது.

அனுகூலமான நாள்கள்: மே 3, 4

அதிர்ஷ்ட எண்கள்: 3, 7