தமிழ்நாடு

நாகப்பட்டினம்: கோடியக்கரையில் இருந்து 15 நாட்டிகல் தென்கிழக்கே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர் நாகப்பட்டின மீனவர்கள். அப்போது கடற்கொள்ளையர்கள் சூழ்ந்து கொண்டு, இரும்புக் கம்பி, கட்டைகளைக் கொண்டு மீனவர்களைக் கடுமையாகத் தாக்கினர். பின்னர், தமிழக மீனவர்களிடமிருந்து ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி மற்றும் வலை உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
சென்னை: சென்னையில் சூளைமேட்டில் கார்த்திக் என்பவரது ஏடிஎம் அட்டை தொலைந்துபோய் விட்டது. ஆனால், அவரது கணக்கில் ரூ.11,870 தொகையை மூன்று தவணைகளில் யாரோ ஒருவர் எடுத்தது குறித்த குறுந்தகவல் மட்டும் கிடைத்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
சென்னை: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்புக் குழுவினர் ரூ.1,309.52 கோடி மதிப்புள்ள பணம், தங்கம் உள்ளிட்ட பரிசுப் பொருள்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை: தர்மபுரி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் மே 2, 3 ஆகிய தேதிகளில் வெப்பநிலை 9 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.