இந்தியா

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயண்பூர், கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரு பெண்கள் உள்பட ஏழு நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்: இந்தியா முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் சூழலில், ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவால் மூன்று சிறுவர்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு: முந்நூற்றுக்கும் அதிகமான பெண்களுடன் உல்லாசமாக இருந்தது தொடர்பான காணொளிகள் வெளியான நிலையில், தேவகவுடாவின் பேரனும் ஜேடிஎஸ் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணாவை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி இடைநீக்கம் செய்துள்ளது.
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தின் ஆறு வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 30) மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினர். காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்ததாக தகவல்கள் தெரிவித்தன.
கோல்கத்தா: மேற்கு வங்கத்தில் மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாக வரும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.