ஏடிஎம் கார்டு மோசடி: முன்னாள் வங்கி ஊழியருக்குச் சிறை

சென்னை: சென்னையில் சூளைமேட்டில் கார்த்திக் என்பவரது ஏடிஎம் அட்டை தொலைந்து போய்விட்டது. ஆனால், அவரது கணக்கில் ரூ.11,870 தொகையை மூன்று தவணைகளில் யாரோ ஒருவர் எடுத்தது குறித்த குறுந்தகவல் மட்டும் கிடைத்துள்ளது.

இதையடுத்து அவர் அருகேயுள்ள காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் 27 வயது ஸ்ரீவாசலு என்பவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்தனர். அந்த விசாரணையில், அவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் முன்னாள் வங்கி ஊழியர் என்பதும் தெரியவந்தது. அந்த ஆடவரிடம் இருந்து 64 ஏடிஎம் அட்டைகள், நான்கு கைப்பேசிகள், கையடக்கக் கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளர்கள் கவனக்குறைவாக விட்டுச் செல்லும் ஏடிஎம் அட்டைகளை வைத்து ஸ்வைபிங் மெஷின்கள் மூலம் குறிப்பிட்ட ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி பணத்தை எடுத்து இவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

ஸ்ரீவாசலு ரெட்டி, விசாரணைக்கு பிறகு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!