மணிப்பூரில் ஆறு வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தின் ஆறு வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 30) மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினர். காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்ததாக தகவல்கள் தெரிவித்தன.

இந்தியாவின் 18வது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது.

இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் இரு கட்டங்களாக கடந்த 19ஆம் தேதியும் 26ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற்றது.

இந்த வாக்குப்பதிவின்போது ஒருசில இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின.

வெளிமணிப்பூரில் நான்கு வாக்குச்சாவடிக்குள் நுழைந்த மர்ம நபர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தை அடித்து உடைத்துச் சேதப்படுத்தினர்.

இரு வாக்குச்சாவடிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறலாம் என்ற அச்சுறுத்தல் நிலவியதால் அங்கு வாக்குப்பதிவு நடைபெறவில்லை.

இதுபோல் வன்முறைச் சம்பவங்கள், அச்சுறுத்தலால் வாக்குப்பதிவு தடைப்பட்ட ஆறு வாக்குச்சாவடிகளில் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தபடி செவ்வாய்க்கிழமை மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!