மோட்டார் சைக்கிள்களுக்கான பிரிவைத் தவிர்த்து, மற்ற வாகனப் பிரிவுகளுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணம் அதிகரித்துள்ளது.
சிறிய வகை கார்களுக்கான கட்டணம் 5.6 விழுக்காடு ஏற்றம் கண்டு $94,010ஆகப் பதிவானது.
பெரிய வகை கார்களுக்கான கட்டணம் 0.7 விழுக்காடு அதிகரித்து $102,001ஆக முடிவடைந்தது.
பொதுப் பிரிவுக்கான கட்டணம் $101,002லிருந்து $103,249ஆக அதிகரித்தது.
மோட்டார் சைக்கிள்களைத் தவிர மற்ற அனைத்து வகை வாகனங்களுக்கும் இப்பிரிவைப் பயன்படுத்தலாம். இருப்பினும், இப்பிரிவு பெரும்பாலும் பெரிய வகை கார்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் 1.5 விழுக்காடு கூடி, $68,502ஆக உயர்ந்தது.
மோட்டார் சைக்கிள்களுக்கான கட்டணம் $10 குறைந்து $9,990ஆகப் பதிவானது.
புதன்கிழமை (ஏப்ரல் 18) இடம்பெற்ற ஏலக்குத்தகையே, நடப்பு மூன்று மாதகால ஒதுக்கீட்டிற்கான கடைசி ஏலக்குத்தகை. அடுத்த மூன்று மாதங்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ்களின் எண்ணிக்கை குறித்த அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.
பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான மூன்று மாத காலத்திற்கான வாகன உரிமைச் சான்றிதழ்களின் எண்ணிக்கை 2 விழுக்காடு உயர்த்தப்பட்டு, மொத்தம் 14,707 சான்றிதழ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
கடந்த 2023 நவம்பர் - 2024 ஜனவரி காலகட்டத்தை ஒப்புநோக்க, இந்த உயர்வு விகிதம் மிகவும் குறைவு. முந்திய 2023 ஆகஸ்ட் - செப்டம்பர் காலகட்டத்தைவிட, அதற்கடுத்த மூன்று மாதங்களுக்கு 27% கூடுதலாக வாகன உரிமைச் சான்றிதழ்கள் ஒதுக்கப்பட்டன.