‘கார்ட்லைஃப்’ நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கைது

தொப்புள் கொடி ரத்த வங்கியான ‘கார்ட்லைஃப்’இன் தலைமை நிதி அதிகாரி தெட் இன் யீ மார்ச் 27ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இருப்பினும் அவர் பிணையில் வெளிவந்தார்.

இந்தத் தகவலை ‘கார்ட்லைஃப்’ நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டது.

தொப்புள் கொடி ரத்த வங்கியில் சேமித்து வைக்கப்பட்ட சில ரத்தப் பெட்டிகளில் குளருபடி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெட் இன் யீ மீது வழக்கு இருந்தாலும் அவர் தொடர்ந்து தலைமை நிதி அதிகாரியாக செயல்படுவார் என்று ‘கார்ட்லைப்’ தெரிவித்தது.

‘கார்ட்லைஃப்’ நிறுவனத்தில் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார் தெட் இன் யீ. நிறுவனத்தில் எல்லோருக்கும் தெரிந்த நபர். பல ஆண்டுகளாக நிறுவனத்தின் நிதி தொடர்பான தகவல்களைத் தெரிந்தவர். தற்போது நாங்கள் எதிர்கொள்ளும் இந்தப் பிரச்சினைக்கு உதவுவதிலும் தெட் இன் யீ பங்கு அதிகம் உள்ளது என்று ‘கார்ட்லைப்’ நிறுவனம் கூறியது.

மார்ச் 22ஆம் தேதி ‘கார்ட்லைஃப்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இயக்குநர் அவையில் உள்ள நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் பிணையில் வெளிவந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!