ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 21 ஆம் தேதி உமறுப் புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் நடந்த முத்தமிழ் விழா 2024, மாணவர்களின் பலவகையான திறன்களையும் தமிழ்ப்பற்றையும் வெளிக்கொணர்ந்தது.
பாலர்பள்ளி, தொடக்கநிலை 1, 2 மாணவர்களுக்கான மாறுவேடப் போட்டிகளின் இறுதிச் சுற்றுகளோடு முத்தமிழ் விழா ஓர் இனிய துவக்கத்தைக் கண்டது.
அழகழகான உடைகளில், சங்க காலக் காப்பியங்களில் தம்மைக் கவர்ந்த கதாமாந்தர்கள்போல வேடமிட்டு மேடையேறி மக்களது மனங்களைப் பறித்தனர் பிஞ்சு இளம் தமிழ் நெஞ்சங்கள்.