ஆந்திர மாநில வேட்பாளருக்கு 18 மாத சிறை

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் மண்டபேட்டா மக்களவைத் தொகுதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி (ஜெகன் கட்சி) வேட்பாளர் தோட்டா திருமூர்த்திலுவுக்கு 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 1996ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், வெங்கடய்ய பாளையத்தில் தலித்துகள் ஐவர் அவமானப்படுத்தப்பட்டனர்.

தற்போதைய வேட்பாளரும் மேலவை உறுப்பினருமான தோட்டா திருமூர்த்திலு உட்பட 6 பேர் மீது தலித் வன்கொடுமைப் பிரிவின்கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

கடந்த 28 ஆண்டுகளாக விசாகப்பட்டினம் நீதிமன்றத்தில் நடபெற்று வந்த இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 16) தீர்ப்பு வழங்கப்பட்டது.

தலித்துகள் மீது நடந்த தாக்குதல் சம்பவம் உண்மைதான் என்றும் தோட்டா திருமூர்த்திலு உட்பட 6 பேரும் குற்றவாளிகள் என்றும் இவர்களுக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனையும் ரூ.2.5 லட்சம் அபராதமும் விதிப்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனை தலித் கூட்டமைப்பினர் விசாகப்பட்டினம், மேற்கு கோதாவரி மாவட்டங்களில் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!