‘கடன் பெற சடலத்தை வங்கிக்குக் கொண்டு சென்ற பெண்’

பிரேசிலியா: பிரேசிலில், 17,000 ரெயாஸ் (4,400 வெள்ளி) தொகையைக் கடனாகப் பெற சடலத்தை வங்கிக்குக் கொண்டு சென்றதாக நம்பப்படும் மாது கைது செய்யப்பட்டதாக பிரேசிலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

68 வயது பாவ்லோ ராபர்ட்டோ பிராகா எனும் ஆடவரின் சடலத்தை எரிக்கா டி சூஸா வியேரா நூனெஸ் எனும் மாது, ரியோ டி ஜெனிரோ நகரில் பாங்கு எனும் குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வங்கிக்கு சக்கர நாற்காலியில் கொண்டு சென்றதாக ஒ’ குளோபோ ஊடகம் தெரிவித்தது.

திருவாட்டி நூனெஸ் அந்தப் பரிவர்த்தனையை மேற்கொள்வது பதிவானதாகக் கூறப்படும் காட்சியை வங்கி ஊழியர் ஒருவர் காணொளியில் பதிவுசெய்தார். நிலைமை ஏதோ சரியில்லாததை உணர்ந்த வங்கி ஊழியர் சம்பவத்தைக் காணொளியில் பதிவுசெய்தார்.

திருவாட்டி நூனெஸ் கைதுசெய்யப்பட்ட பிறகு அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பலரால் பகிரப்பட்டது.

அந்தக் காணொளியில் திருவாட்டி நூனெஸ், திரு பிராகாவின் சடலத்திடம் பேசிக்கொண்டிருந்தது பதிவானதாகக் கூறப்படுகிறது. திரு பிராகா பார்ப்பதற்கு ‘உடல்நலம் சரியில்லாததுபோல் இருந்ததை’ இன்னொரு வங்கி ஊழியர் கவனித்தார்.

பிறகு வங்கி ஊழியர்கள் அவசர மருத்துவ உதவி வாகனத்தை அழைத்ததுடன், காவல்துறையிடம் புகாரும் கொடுத்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!