ஏமாற்றியது உள்ளிட்ட குற்றங்களுக்காக ஏற்கெனவே ஆறு ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் வழக்கறிஞருக்கு மீண்டும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு மீண்டும் குற்றம் புரிந்ததற்காக அவருக்கு மீண்டும் தண்டனை விதிக்கப்பட்டது.
இப்போது 56 வயதாகும் லியோங் வய் நம், 2010ஆம் அண்டு வழக்கறிஞர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டார். அப்படியிருந்தும் 2016ஆம் அண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதிக்கும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டுமான நிறுவனத்தின் இயக்குநர் ஒருவர் சட்டச் சேவைகளுக்காக லியோங்கிற்கு 13,400 வெள்ளியைக் கொடுத்திருக்கிறார்.
புதன்க்கிழமையன்று (ஏப்ரல் 17) லியோங்கிற்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஏமாற்றியதன் தொடர்பில் தன் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை அவர் இவ்வாண்டு மார்ச் மாதம் ஒப்புக்கொண்டார்.
ஏமாற்றிப் பெற்ற பணத்தைத் திரும்பத் தர லியோங்கால் போதுமான தொகையைத் திரட்ட முடியவில்லை என்று ரீகல் லா நிறுவனத்தைச் சேர்ந்த அவரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.