‘எனது ஐந்து ரூபாயை இழந்துவிட்டேன்’: பரவலான பேருந்துப் பயணியின் பதிவு

பெங்களூரு: அரசுப் பேருந்தில் பயணி ஒருவருக்கு நேர்ந்த அனுபவம் இப்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

நித்தின் கிருஷ்ணா என்ற அந்தப் பயணி, கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் அரசுப் பேருந்து ஒன்றில் பயணம் செய்தபோது, அதன் நடத்துநர் ஐந்து ரூபாய் சில்லறை தரவில்லை எனத் தமது எக்ஸ் ஊடகப் பக்கம் வழியாகத் தெரிவித்துள்ளார்.

“நடத்துநரிடம் ஒரு ரூபாய்கூட சில்லறை இல்லாததால் நான் என்னுடைய ஐந்து ரூபாயை இழந்துவிட்டேன். இதற்கு ஏதேனும் தீர்வு உள்ளதா?” என்று தமது பதிவு வழியாக பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகத்திடம் (பிஎம்டிசி) நித்தின் கேட்டுள்ளார்.

“பயணம் தொடங்கும் முன்னரே நடத்துநர்களுக்குப் போதுமான சில்லறை வழங்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையேல், இணையம் வழியாகக் கட்டணம் செலுத்த வழிவகை செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் நான் எனது பணத்தை இழக்க வேண்டுமா? அல்லது இப்படிக் குறுக்குவழியைப் பயன்படுத்தி நடத்துநர்கள் காசு பார்க்கிறார்களா?” என்று அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது இப்பதிவு இணையத்தில் வெகுவேகமாகப் பரவ, இணையவாசிகள் அதுகுறித்து விவாதிக்கத் தொடங்கிவிட்டனர். அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், “உங்களது புகார் பதிவுசெய்யப்பட்டுவிட்டது,” என்று பிஎம்டிசி அதிகாரி ஒருவரும் நித்தினின் பதிவிற்குப் பதிலளித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!