அருண் விஜய் நடிக்கும் படத்தின் கதை பிடித்திருந்ததால் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டேன் என்கிறார் சித்தி இத்னானி.
சிவகார்த்திகேயனை வைத்து `மான் கராத்தே’ படத்தை இயக்கிய கிரிஷ் திருக்குமரன், மீண்டும் படம் இயக்கத் தொடங்கியுள்ளார். அருண் விஜய்யின் 36வது படத்தை அவர் இயக்குகிறார். இதில் சித்தி இத்னானி நாயகியாக நடிக்கிறார். சிம்புவின் `வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்தவர் இவர். ``ஆர்யாவுடன் நடித்த `காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தை முடித்தவுடன் நிறைய கதைகள் வந்தன. அதில், அருண் விஜய் படத்தின் கதை என்னை மிகவும் கவர்ந்தது. அதனால் அந்தப் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டேன்,” என்றார் சித்தி.