லிங்குசாமி முதல் முறையாக தெலுங்கு திரைப்படம் ஒன்றை இயக்குகிறார். இந்தப் படத்தில் வில்லனாக நடிகர் ஆதி நடித்து முடித்திருக்கிறார்.
சண்டைக் காட்சிகள் நிறைந்த இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவுற்று தற்பொழுது நாயகன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. நடிகர் ஆதியின் காட்சிகள் அனைத்தும் முடிவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது.
தொடர் வெற்றிப் படங்களின் மூலம் தமிழ்த் திரையில் முன்னணி இயக்குநராக வலம் வந்த இயக்குநர் லிங்குசாமி, இறுதியாக வெளியான ஓரிரண்டு படங்கள் மூலம் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகி சில ஆண்டுகளாக காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில் முதன்முறையாக தெலுங்கில் நேரடி படம் ஒன்றை இயக்கி வருகிறார். முன்னணி நடிகர் ராம் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
விஜய் சேதுபதியின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வசூல் வேட்டை நடத்திய 'உப்பண்ணா' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமான கீர்த்தி ஷெட்டி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
இந்நிலையில் நடிகர் ஆதி இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். முன்னணி நடிகர்கள் தைரியமாக வில்லனாக நடிக்க பிள்ளையார் சுழி போட்டவர் நடிகர் விஜய் சேதுபதிதான்.
அவரைப் பின்பற்றி தற்பொழுது பல முன்னணி நடிகர்கள் வில்லன் வேடங்களில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். 'உப்பண்ணா' படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக மிரட்டியது போலவே இந்தப் படத்தில் ஆதி மிரட்டி இருப்பதாகக் கூறப்படுகிறது.